Tuesday, August 23, 2011

புலம்பெயர்ந்தோருடனிணைந்து சிங்களத் தலைவர்களை ஊடகமொன்று பலவீனப்படுத்துதாம்

இலங்கையில் உள்ள சிங்கள தலைவர்களை மனரீதியான பலவீனப்படுத்த, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஒரு ஊடகம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய பிக்குமார் சங்கத்தினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, சங்கத்தின் தலைவர் மாலபே சீலரத்ன தேரர் இதனை தெரிவித்தார்.

கடந்த நாட்களில் வேலுப்பிள்ளை பிரகாரனுடன் இணைந்த சில சிங்களத் தலைவர்கள், பல அரசியல் தலைவர்களை கொன்று குவித்தனர்.

இதேபோன்று தற்போது புலம்பெயர்ந்தோர் அமைப்புடன் இணைந்து, இலங்கையின் ஒரு ஊடகம் சிங்கள தலைவர்களை உடல் மற்றும் உள ரீதியாக காயப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  August 23, 2011 at 4:11 PM  

Lord Jesus was crucified because one of His deciples.Great worrier Julius Ceasar ended his life with the last stabbing of his best friend Brutus .
Loving God has created the excellent, good,bad and the ugly.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com