Sunday, August 14, 2011

நிர்வாணமாக ஆபாச படம் பார்துக் கொண்டிருந்த மாணவியும் காதலனும் கைது.

நுகேகொடயில் உள்ள சர்வதேச பாடாசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவனும் மஹரகம, தேவல வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து நிர்வாணமான நிலையில் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இருவரையும் தமது விடுதியில் தங்குவதற்கு இடமளித்த குற்றச்சாட்டில் அந்த விடுதி உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவி தனது பாடசாலை சீருடையை கழற்றி வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் அது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

ஆபாசத் திரைப்பட இறுவட்டுக்கள் (சி.டி), ஆபாச படத்தைப் பார்க்க பயன்படுத்தப்பட்ட சி.டி இயந்திரம் என்பனவும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கங்கொடவில மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பாடசாலை மாணவியின் பெற்றோர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு, மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இளைஞனும் விடுதி உரிமையாளரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com