Sunday, August 21, 2011

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 47பலி. 29 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதுடன் வெள்ளம் காரணமாக 29 இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த பகுதியிலுள்ள பல ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதுடன்,மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 219 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவர் அமைப்புக்கள் பலவும் உலர் உணவுப் பொருட்களை வழங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com