Sunday, August 21, 2011

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு உதவிய ஈரான் மற்றும் சவூதி அரேபியா:

கடந்த செப் 11, 2001 அன்று அல்-கொய்தா இயக்க தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோத செய்து தாக்குதல் நடத்தினர். இதில் ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற 10-வது வருட நினைவு தினம் வர உள்ள நிலையில், தற்போது, அந்தோணி சம்மர்ஸ் மற்றும் ராபின் ஸ்வான் ஆகிய இருவர் எழுதியுள்ள தி லெவென்த் டே என்ற புத்தகத்தில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் அல்-கொய்தா இயக்கத்திற்கு உதவியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பல ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் அவர்கள் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com