Thursday, October 14, 2010

ஆழ ஊடுருவி தாக்குதல் : சார்க் நாடுகளுக்கு இலங்கை இராணுவம் பயிற்சி

ஆழ ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளும் யுத்த உத்தி குறித்து இலங்கை இராணுவம் சார்க் நாடுகளின் படையினருக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் சார்க் நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குழுக்கள், ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என இச்செய்தியை வெளியிட்டுள்ள கொழும்பிலிருந்து வெளியாகும் "திவயின" பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் உத்தி தொடர்பாக அமெரிக்காவும் இலங்கையிடம் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தி வருவதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் ஆழ ஊடுருவும் படையணியினரின் செயற்திறன் அவ்வியக்கத்தை நிலைகுலையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பாக இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்த்தர் ஒருவர் தலைமையில் குழுவொன்று இன்றிரவு இந்தியா புறப்படுகின்றது என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com