Thursday, October 14, 2010

ஜனாதிபதி கொலை சூழ்ச்சியாளர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

ஜனாதிபதி மற்றும் அவருடைய குடும்பத்தவர்களை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு சமர்பித்த விடயங்களை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த 17 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். கொழும்பு நகரில் தங்கியிருந்து ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியமானவர்களை கொலை செய்ய இவர்கள் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஆலோசனைக் கிடைத்தவுடன் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com