Thursday, October 14, 2010

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியாவில்.

பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரதானியாக நியமனம்பெறவுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா லண்டன் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. கடமையினை எப்போது பொறுப்பேற்பார் என்பதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பிரித்தானியாவில் இலங்கை தூதரகத்தினை பலமுறை தொடர்பு கொண்டபோதும், சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் எதிர்வரும் சில நாட்களில் அவர் கடமையினை பாரமெடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவ அதிகாரிகளை தூதரகங்களில் அமர்த்துவதற்கு எதிராக புலிகள் பலத்த எதிர்ப்புக்களை காட்டிவந்தபோதும் , அவர்களின் எதிர்ப்புக்கள் சர்வதேச சமூகத்தினால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com