Tuesday, September 28, 2010

"உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு" : மனித அபிவிருத்தித் தாபனம் விரிவான ஏற்பாடு.

'உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு' எனும் மகுடத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 2500க்கு மேற்பட்ட மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்களும் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முறையும் இப் பாராட்டுவிழாவை மலையகத்தில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் நடாத்த மனித அபிவிருத்தித் தாபனம் விரிவான ஏற்பாடு செய்தவருவதாக தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.


சிறு வயதில் ஊக்கமளிப்பதன் மூலம் பெருந்தோட்டத்தின் கல்வி அபிவிருத்தியில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான பாராட்டு விழாக்களை தாபனம் நடாத்தி வருகின்றது.

மனித அபிவிருத்தி தாபனம் இலங்கையின் பல பாகங்களில் சமூக அபிவிருத்திக்காக பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றது. கல்விஇ பொருளாதாரமஇ; சம உரிமைஇ சமாதானம் பால்நிலை சமத்துவம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை இலக்குப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துகின்றது.

கல்வியின் சார் பல வேலைத்திட்டங்கள் பெருந்தோட்ட துறைகளில் கடந்த இரு தசாப்த காலங்களாக அமுல்படுத்தி வருகின்றது. மலையகக் கல்வியின் அபிவிருத்திக்காக குரல்கொடுத்து வருகின்ற நிறுவனம் 5ம் தர புலமைப்பரிசில் பரீ;ட்சை எழுதும் மாணவர்களை கௌரவிப்பு நிகழ்ச்சிகளை கடந்த மூன்று வருட காலமாக பெருந்தோட்ட துறையை மையமாகக் கொண்டு நடாத்தி வந்துள்ளது.

இத் தாபனம் பெருந்தோட்ட துறையை மையமாக வைத்து தாபிக்கப்பட்டிருந்தாலும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின் கரையோர பிரதேசங்களில் தனது மனிதாபிமான பணிகளை ஆரம்பித்தது.

இதில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து நடாத்தி வருகின்றது. அம்பாரை மாவட்டத்தில் ஆரம்ப நிவாரணம் தொடக்கம் நிரந்தர வீடுகள் வரை படிப்படியாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தது.

உடனடி நிவாரணம் மருத்துவ முகாம் தற்காலிக கொட்டில்கள் உளநல பாதுகாப்பு பாலர்களின் கல்வி பாடசாலைகளின் அபிவிருத்தி பெண்களின் வாழ்வாதாரம் நிரந்தர வீடுகள் என தனது சேவைகளை அம்பாரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய நிறுவனமாகும். தற்போது கல்வியின் பால் அதிக அக்கறை காட்டி 5ம்தர கா.பொ.த சாதாரண தர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்படுவதுடன் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மேலதிக மாலைநேர வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. அந்த துறையில் அதற்கான பெறுபேறுகளும் அதிகரித்து கிடைத்தமைக்கு சான்றிதழ்கள் உள்ளன.

கல்வியின் பால் அக்கறை செலுத்தி வருகின்ற இந் நிறுவனத்தின் மலையகத்தில் 'உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு' விழாவை அம்பாரை மாவட்டத்திலும் நடாத்தப்பட வேண்டும் என மக்களும் கல்வி சார்ந்த அதிகாரிகளும் சமூக நல உறுப்பினர்களும் வேண்டியுள்ளனர்.

இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் இவ் விழா முதற்தடவையாக அம்பாரை மாவட்டத்தில் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருகோணமலை ஆகிய கல்வி வலயங்களில் தோற்றிய மாணவர்களுக்கு நடாத்த திட்டமிட்டுள்ளது. 100புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்க முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்ற விளம்பரத்தினை வாசித்து உடனடியாக இதற்கு விண்ணப்பிக்கும் படி மாணவர்களை கேட்டுக்கொள்கின்றனர். விண்ணப்பதாரிகள் பாடசாலை ரீதியாக விண்ணப்பிப்பதே உகந்தது என தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று அம்பாரை மாவட்டத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் தமிழ் மொழி மூலம் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம் ஒன்றினையும் தாபனம் வெளியிடவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com