Tuesday, September 28, 2010

மலேசியாவில் 3 இலங்கையருக்கு கடூழிய சிறை.

சிறுவன் ஒருவரைக் கடந்த வருடம் கடத்தினர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் அந்நாட்டவர் ஒருவருக்கும், இலங்கையர் மூவருக்கும் இன்று தலா மூன்றாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த இச்சிறுவனை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரின் செட்டபக் பிரதேசத்தில் ஜலன் லங்வி பகுதியில் உள்ள டெராடி மெவாக் வீட்டுத்தொகுதிக்கு அருகில் வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது வழக்கு இடம்பெற்றது. இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அந்நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்று குறைந்த பட்சத் தண்டனை வழங்கி உள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி தடுக் மெஹமட் ஷபிதீன் மொஹத் டயா இத்தீர்ப்பை வழங்கினார்.

இலங்கையரான எஸ்.செல்வகுமார்(வயது 32), பி.ஜயநாதன்(வயது 26), ஜே.அந்தோனி(வயது 22) மற்றும் மலேசியரான ரி.ராமு (வயது 22), ஆகியோரே தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com