Tuesday, September 28, 2010

முஸ்லிம் தீவிரவாத குழுக்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த 24ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் மௌலவிக்களை அழைத்துப்பேசிய உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் ஆயுதங்கள் யாவும் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பாரமளிக்கப்படவேண்டும் என தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும். இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com