Monday, September 27, 2010

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு அமெரிக்க விரிவுரையாளர் விசேட கருத்தரங்கு.

(மன்னார் நிருபர் -லெம்பேட்)ஊடகவியலாளர்கள் வினைத்திறன் கொண்டவர்களாகவும் பதட்டமடையாது எந்த சூழலிலும் சாதுரியமாக தமது தொழில்ரீதியிலான கடமையினை செய்யக்கூடிய ஆளுமை வளர்த்துக்கொள்ளவேண்டும் என ஊடகவிலாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த விரிவுரையாளர் நியூமன்ஹேலானா தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட யுத்த கால சூழலில் கடமையாற்றிய 30 ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் பயிற்சி நெறி சனி. ஞாயிறு தினங்களில் அனுராதபுரம் உல்லாசபயண விடுதியில் நடைபெற்றது. இதழியல் கல்லுர்ரி, இலங்கை பத்திரிகை தாபனம்,செய்தியாளர்களுக்கான சர்வதேச பாதுகாப்பு நிலையமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

ஊடகவியலாளர்களும் மனவடுக்களும் என்ற தொனியில் பயிற்சி நடைபெற்றது.
மனவடு அல்லது மனதாக்கம் பல வழிகளிலும் எதிர்நோக்கலாம் யுத்தம், பாரிய இயற்கை அனர்த்தம் விபத்துக்கள் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை ஊடகவியலாளர்கள் அணுகும்போது அவர்கள் எவ்வாறான நடைமுறைகளை கைக்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவுரையாளர் தெளிவாக குறிப்பிட்டார்.

மனகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு மேலும் மனக்காயங்கள் ஏற்பாடாத வகையில் நேர்காணல்கள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இழப்புக்கள் தாங்கமுடியாத மன உளைச்சலை ஏற்படுத்தும் அதனை குணப்படுத்தலாம் ஆலயங்களுக்கு செல்வது சிறந்த வழி என இந்த நிகழ்வில் உரையாற்றிய மனநல வைத்தியர் டாக்டர் எஸ் சிவதாசன் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் மனவடுக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து சதவீதத்தினரே உள்ளனர் என குறிப்பிட்ட இவர் குடும்பத்தில் சந்தோஷம் அவசியம் எனவும் சொன்னார். சிந்தனை தொடர்பாடல் ஊடகத்துறையினருக்கு முக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.

பயிற்சி நெறியில் கலந்து கொண்ட யழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com