மேலும் ஒருதொகுதி முன்னாள் புலிகளுக்கு கொழும்பில் கல்வி வசதி.
புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் படையிரால் கைது செய்யப்பட்டும், சரணடைந்துமிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது தமது கல்வியை தொடர விருப்புவோருக்கு அதற்குரிய வாய்புக்கள் செய்து கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறு கடந்த சில வராங்களுக்கு முன்னர் 81 சிறுவர்களும் 63 சிறுமிகளுமாக 154 பேர் கொழும்பு ரத்மலானை இந்துக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். அதன் இரண்டாம் கட்டமாக கடந்த 31ம் திகதி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 44 சிறுவர்களும் 23 சிறுமிகளும் கொழும்பு கொண்டுவரப்பட்டு அதே பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தங்குமிட, உணவு உட்பட சகல வசதிகளும் அரச செலவில் வழங்கப்படுவதுடன், இவர்களின் பெற்றோர் மாதத்தில் ஒருமுறை அல்லது 2 முறை பார்வையிட முடியும் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment