பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கைது.
மனநலம் பாதிப்படைந்த இளைஞன் ஒருவரை அடித்து துன்புறுத்தி நீரில் மூழ்கடித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் விஜேந்திர வீரரத்தின என்பவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவரை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் பொலிஸில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட இளைஞனது மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக உடலின் சில அவயங்களை கண்டி பேராதனிய மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸாரின் மனிதாபிமான மற்ற செயலை நேரில் கண்ட 40 மேற்பட்டோர் சாட்சியமளித்துள்ளனர். அத்தோடு இளைஞர் தாக்கப்பட்டபோது பல வழிப்போக்கர்களும் சேர்ந்து இளைஞனை தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு கொழும்பு பேராயர் வேண்டியுள்ளார். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து நாளை நண்பகல் எதிர்ப்பு பேரணி ஒன்றை நாடாத்வுள்ளதாகவும் அதில் அனைவரையும் இன, மத பேதங்களின்றி கலந்து கொள்ளுமாறும் மனோ கணேசன் வேண்டியுள்ளார்.
0 comments :
Post a Comment