மஹிந்த மாமா ஏன் எங்கள் வீடு எரிக்கப்பட்டது.
பா.உறுப்பினரின் குடும்பம் பாராளுமன்றின் முன் சத்தியாகிரகம். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் குடும்பத்தினர் பாராளுமன்றின் முன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.உ ரங்க பண்டார தென்மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற்றபோது கட்சிப்பணிகளின் நிமிர்த்தம் தென்மாகாணத்தில் தங்கி இருக்கையில் அவரது வீடு புத்தளம் பிரதேசத்தில் எரியூட்டப்பட்டிருந்தது.
தமது வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்ப அல்லது தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்த்து ரங்க பண்டார தனது குடும்பத்தினருடன் பாராளுமன்றின் முன் சத்தியா கிரகம் இருப்பதை காணமுடிகின்றது. அங்கு அவரது மகள் „ரnகிள் மஹிந்த ஏன் எங்கள் வீடு எரியூட்டப்பட்டது' என்ற சுலோகத்தை தாங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment