ஐ.தே.கட்சி தலைமையில் 12 கட்சிகளின் கூட்டணி. தலைவர்கள் கையொப்பம்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் 12 கட்சிகளின் கூட்டணி ஒன்று சற்று நேரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்க சுதந்திரக் கட்சி (மக்கள் முன்னணி) மங்கள சமரவீர ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
முன்னணியை ஆரம்பித்து வைத்து பேசிய அவர்கள், முன்னணியானது நாட்டில் ஊழலை ஒழித்து ஜனநாயத்தை நிலைநாட்டும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment