சிறுபாண்மைக் கட்சிகளின் கூட்டணி தொடர்பாக இன்று பேசப்படுகின்றது.
சிறுபாண்மைக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக இன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் அதன் தலைவர்கள் கூடி ஆராய்கின்றனர். கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள், கொள்கைகள் தொடர்பாக இன்று பேசப்படவுள்ளதாக அதில் அங்கம்
பெறவுள்ள கட்சியொன்றின் தலைவர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாரா எனக் கேட்கப்பட்டிருந்தபோது, அது தொடர்பாக வேட்புமனுக் கோரப்படும்போது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபாண்மைக் கட்சிகளின் கூட்டில் அங்கம் வகிக்கவுள்ள மனோ கணேசனது கட்சி, ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணியுடனும் இணைந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment