Tuesday, November 3, 2009

வெளிநாடுகளில் மறிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப அரசு வேண்டுகோள்

வெளிநாடுகளில் வழிமறிக்கப்பட்டுள்ள சட்ட விரோதக் குடியேற்றக் காரர்களில் இலங்கையர்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட இலங்கையர்கள் அனைவரையும் இலங்கைக்கு திருப்பியனுப்புமாறு இலங்கையின் வெளிவிபகார அமைச்சு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் சட்டவிரோதமாக குடியேறும் நோக்கில் சென்று கடலில் மூன்று இடங்களில் வழி மறிக்கப்பட்டுள்ள (இந்துநேசியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா) சட்டவிரோதக் குடியேற்றக் காரர்கள் இலங்கையர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் அவர்கள் உண்மையில் இலங்கையர்களா? என்று விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் உண்மையில் இலங்கையர்கள் என இனம்காணப்படும் அனைவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு வெளிவிபகார அமைச்சு அந்தத்த நாட்டின் அரசுகளை கேட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இலங்கையின் சட்ட திட்டங்களை மீறி தப்பிச் சென்றவர்களாவர் இவர்களில் புலிகள் இருந்தால் அவர்கள் மீதும் ஏனையவர்கள் சட்டங்களை மீறியதற்காகவும் சட்டப்படி விசாரிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com