Tuesday, November 3, 2009

வெளிநாடு செல்லும் பெற்றோருக்கு புதிய சட்டம்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்புக்காய் செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் புதிய சட்டம்
இனி வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பை அந்தந்தப் பிரதேசத்தில் உள்ள நீதவான்கள் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல முடியும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது

இந்தச் சட்டம் வெளிநாடுகளில் பெற்றோர் வேலை வாய்ப்புக்காக செல்வதனால் அவர்களின் பிள்ளைகள் உரிய பாதுகாப்பு இன்மையினால் உடல் உள அசேளகரியங்களுக்கு ஆளாவதாகவும் இதனை கட்டுப்படுத்தவே புதிய சட்டம் அமுலுக்கு வருவதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த பெற்றோர் தாங்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்புக்காக செல்ல விண்ணப்பித்தால் அந்தந்தப் பகுதியிலுள்ள நீதி மன்றங்களில் தங்களின் பிள்ளைகளுக்காக பாதுகாவல்களை நியமித்து அதனை உறுதிப்படுத்திய சான்றிதழை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிக்கத் தவறும் பெற்றோர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நீதி மன்றங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அந்த பாதுகாவலர்களை குறித்து உறுதி செய்யதுகொள்ள அதிகாரம் உடையன என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com