சட்டவிரோத நீர் பாவனைக்காக அமெரிக்க தூதரகம் நஸ்டஈடு செலுத்தியது.
அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தில் சட்டவிரோதமாக நீர் பாவிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அல்பிறட் கிறசன்ற் இல் அமைந்துள்ள அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் இவ்விடயத்தை கண்டு பிடித்துள்ளனர்.
நீர் வழங்கல் அதிகார சபை அதிகாரிகளால் 370440 ரூபா நஸ்டஈடு வழங்க பணிக்கப்பட்டுள்ளது. நஸ்டஈட்டு தொகை கடந்த 14ம் திகதி தூதரகத்தினால் ராஜகிரிய வில் உள்ள நீர்வழங்கல் சபையின் தலைமைக் காரியாலயத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இதே குற்றத்திற்காக கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கன் நிலையம் 890469 ரூபாவை நஸ்ட ஈடாக செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment