Friday, October 16, 2009

நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நாடாத்த கோரும் எதிர் கட்சியினர்.

பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான கரு ஜெயசூரிய அவர்களின் தலைமையில் தேர்தல்கள் ஆனையாளரைச் சந்தித்த எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்காலத்தில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடாத்தக்கோரியுள்ளனர்.

கடந்த காலங்களில் மோசடிகளும், தவறான வழிநடத்தல்களும் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் எதிர்வரும் இரு முக்கியமான தேசிய மட்டத்திலான தேர்தல்களுக்கும் சர்வதேச மேற்பார்வையாளர்கள் மற்றும் அவதானிகளை அழைத்துவருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com