Friday, October 16, 2009

ஜெனரல் பொன்சேகாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித கசப்புணர்வும் இல்லை.

அரசாங்கத்திற்கும், முப்படைகளின் தலமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கும் இடையில் எவ்வித கசப்புணர்வும் இல்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களில் உலாவும் அரசிற்கும் ஜெனரலுக்கும் இடையிலான சர்சை தொடர்பாக ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்டபோது, பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துடன், இவ்விடயம் தொடர்பாக பல துண்டுப்பிரசுரங்கள் மற்றும் இணையத்தளச் செய்திகள் உலா வருவதாகவும் அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com