Thursday, October 15, 2009

ஜெ'புர பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தின் வாயிலை மறித்து நிற்கும் மாணவர்கள்.

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டத்தினுள் அதன் உத்தியோகித்தர்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மாணவர்கள் அங்கு ஆங்கு ஆhப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் 3 மூன்று மாணவர்களின் அனுமதி ரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்தே மேற்படி ஆர்ப்பாட்டம் அங்கு இடம்பெறுகின்றது.

குறிப்பிட்ட மூன்று மாணவர்களும் பகிடிவதை மற்றும் ஆர்பாட்டங்களை வழிநாடாத்தியதாக கூறியே அவர்களுடைய பல்கலக்கழக அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் இணைதுக்கொள்ளக் கோரி சக மாணவர்கள் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். பல்கலைக்கழக பதிவாளர் காரியாலயத்தினுள் அதிகாரிகள் எவரும் நுழைய முடியாதவாறு மாணவர்கள் அங்கு கூடி நிற்பதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com