Thursday, October 15, 2009

தென் மாகாண சபைத் தேர்தலின் மூலம் மக்கள் அரசிற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். விமல்.

அண்மையில் தென்மாகாணத்தில் இடம்பெற்று முடிந்துள்ள தேர்தலில் மக்கள் அரசிற்கு ஓர் எச்சரிக்கை சமிக்கையை அறிவித்துள்ளனர் என ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்தர முன்னணி எனும் அமைப்பை நிறுவியுள்ள விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகள் அரசு சில தவறான பாதைகளை தெரிந்தெடுத்துள்ளது என்பதற்கு சாட்சியமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், தென்மாகாண சபையின் முதலமைச்சராக ஷான் விஜெலால் அவர்களை முதலமைச்சராக நியமிக்க எடுத்துள்ள முடிவானது, அரசு மக்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உணந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளினால் அமைக்கப்படவுள்ள கூட்டணியில் பொது அபேட்சகராக ஜெனரல் சரத்பொன்சேகா வை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் தொடர்பாக கேட்டபோது, அவ்வாறான ஓர் முடிவை எடுப்பதற்கு ஜெனரல் ஓர் மடையன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com