Sunday, October 4, 2009

ஐக்கிய தேசியக் கட்சி எம்பி க்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

தெனியாய பிரதேசத்தில் அரச நிறுவனங்களின் அனுசரணையுடன் அமைக்கப்படுவதாக கூறப்படும் மாளிகை ஒன்றினை பார்வையிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தலைமையில் சென்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தெனியாய வெவெரெலிய எனும் கிராமத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்போரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்த 5 ஊடகவியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பேரணியாக குறிப்பிட்ட இடத்தினை பார்வையிடுவதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவாளர்கள் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனங்களில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சென்ற வாகனம் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளதுடன் வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் துசித்து ரணவக்க ஆகியோர் துபமிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ் சாட்டியுள்ளதுடன் அத்தாக்குதலை நாடத்தியவர்களால் தமது ஆதரவாளர்கள் சென்ற நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க வின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் டிலான் பெரேரா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வாகனங்களை விடுவிப்பதற்கு தான் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com