Monday, October 5, 2009

திருக்கோவிலில் சுகாதார கல்விக் கண்காட்சி.

பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதார அறிவை மேம்படுத்தும் நோக்குடன் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் திருக்கோவில் கோட்ட பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சுகாதார கல்விக் கண்காட்சியானது இன்று 05.10.2009 காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய மாகாவித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் பிரதம அதியாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு இனிய பாரதி அவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. யு,ஊ,யு அசீஸ் அவர்களும் , திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி திரு. ராஜேந்திரா மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர் வ.கணேசமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உலக தரிசனம் நிறுவனத்தினால் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ராஜேந்திரா அவர்களிடம் வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com