இடம்பெயர்ந்த மக்களுக்காக 700 மில்லியன் ரூபாய்களை ஐசிஆர்சி செலவிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 700 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக அண்மையில் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்புக்களுக்கான இணைப்பாளர் Hachim Badji தெரிவித்துள்ளார்.
இப்பணம் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நீர், மலசலகூட தேவைகள், மருத்துவம், சத்துணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தேவைகளின் நிமிர்த்தம் ஐசிஆர்சியின் 500 ஊழியர்கள் திருமலை, வவுனியா, மன்னார், யாழ்பாணம் போன்ற இடங்களில் 24 மணித்தியாலயமும் செயற்பட்டுவருவதாகும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment