Monday, October 19, 2009

அகதிகளை மீளக் குடியமர்த்தும் பணி குடாநாட்டில் நவம்பர் மத்தியில் பூர்த்தியாகும். வன்னித் தளபதி

இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் பணி யாழ். குடாநாட்டில் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியளவில் பூர்த்தியடைந்துவிடும் என அரச தரப்பு அறிவித்துள்ளது. வன்னிமாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின இத் தகவலை வெளியிட்டார். இதுவரை 16 ஆயிரம் பேரை மீள்குடிய மர்த்தியுள்ளோம். அவர்களில் 8 ஆயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தியுள்ளோம் என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின மேலும் கூறினார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 282,000 பொதுமக்களில் இதுவரை 55 ஆயிரம் பேர் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு தடவையும் 2 ஆயிரம் பேர் வீதம் 40 ஆயிரம் இடம் பெயர்ந்தவர்களை யாழ்.மாவட்டத்தில் மீள் குடியமர்த்த "வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வவுனியா, யாழ்ப்பாணம். அரச அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின மேலும் தெரிவித்தார். அதேபோல் மன்னார் மாவட்டத்தில் 1,200 பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். கிழக்கு மாகாண குடியமர்வு பூர்த்தியாகியுள்ளது. என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com