Monday, October 19, 2009

திருமனை மாவட்ட த.தே.கூ , ஐ.தே.க முன்னணி செயற்பாட்டாளர்கள் அரசுடன் இணைவு.

திருமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர். பா.உ பசில் ராஜபக்ஷ வுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இவ்வாறு கட்சி தாவியுள்ளதாக தெரிவியவருகின்றது.

திருமலை மேயரது இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், திருமலை மேயர், பிரதேச சபைத் தலைவர், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சில ஐக்கிய தேசியக் கட்சின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com