அரச துறை வெற்றிடங்கள் 2010 இல் நிரப்பப்படும்: அமைச்சர் சியம்பலாப்பிட்டிய சபையில் தகவல்
அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் யாவும் 2010 ஆம் ஆண்டு நிரப்பப்படுவதுடன் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடு க்கப்படும் என அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவது எவ்வகையிலும் நிறுத்தப்படவில்லை. அத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்ற சுற்று நிருபம் வெளியிடப்படவும் இல்லை எனவும் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து பேசியதுடன் அரச துறையில் வேலைவாய்ப்பு, மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு பதிலளித்தார்.
2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை 57,764 பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வேலையின்மை 2005 ஆம் ஆண்டில் 7.7 வீதமாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு 5.2 வீதமாக குறைவடைந்தது. நாட்டிலுள்ள வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச துறையால் மட்டும் முடியாது என் பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரச துறையில் நிலவும் பட்டதாரி களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பாக விசேட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் 2010ஆம் ஆண்டு அரச துறையில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
மேலும் இவற்றுக்கு ஏற்ப தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் செய் யப்படுகின்றன. வரவு-செலவு திட்ட பிரிவுடன் கலந்தாலோசிக் கப்பட்டு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய துறைக்கும் மேலதிக நிதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்படும் என்றும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
0 comments :
Post a Comment