எதிர்கட்சி எம்பிக்களை விட இந்திய அரசை நாம் நம்பகின்றோம். மைத்திரிபால
இலங்கையில் உள்ள எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட அரசு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை நம்புவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழி நாழிதளான "தினமின" விற்கு வழங்கிய பேட்டியொன்றில், இலங்கை அரசாங்கம் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினகளிலும் பார்க்க இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிய காரணத்தினாலேயே அவர்களை இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல அனுமதித்தாகவும், எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைத்தங்கல் முகாம் மக்களின் விவகாரங்களை அரசியலாக்க முற்பட்டு வருவதாகவம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அதன் அதன் பூரண பங்களிப்பை செய்துள்ளது. இந்தியாவிலே 5 கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசியல் சிக்கல்களை எதிர்நோக்குகின்றபோது அவர்களுடன் எமக்கு ஒத்துழைக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment