புலிக் குழந்தைகள் கொழும்பில் தமது கல்வியை தொடர ஏற்பாடு.
கடந்த யுத்தத்தின் போது சரணடைந்த, கைது செய்யப்பட்ட புலிகளுக்கு புனருத்தாபனம் அளிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக 168 குழந்தைப் புலிகள் தமது கல்வியை கொழும்பில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா பூந்தோட்டம் முகாமில் இருந்து கொழும்பு கொண்டுவரப்பட்டு ரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுளனர்.
8ம் வகுப்பு முதல் உயர்தரம் வரையான மாணவர்கள் இவர்களுள் அடங்குகின்றனர். இவர்களுக்கான தங்குமிடம் பாடசாலை விடுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக மேலும் 100 மாணவர்கள் இங்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்களில் பலர் தாம் புலிகளின் இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் என்பதையும் பல தாக்குதல்களில் ஈடுபட்பவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்:
0 comments :
Post a Comment