கிழக்கில் தொடர் வரட்சி! குடி நீருக்கும் தட்டுப்பாடு.
கிழக்கில் வடகிழக்கு பருவக்காற்றினால் கிடைக்கும் மழை இவ்வருடம் கிடைக்காமையால் தொடரும் வரட்சி காரணமாக கிணறுகள் வற்றிக் காணப்படுகின்றன இதனால் குடி நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது அத்துடன் ஒரு வகையான காய்ச்சலும் சிறு குழந்தைகளுக்கு பரவுவதை அவதானிக்க முடிகிறது. தொடர் சத்தியுடன் கூடிய இக்காய்ச்சலால் கிழக்கில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் கஸ்டப்படவேண்டிய நிலை ஏற்படும் அபாயமுள்ளது. அத்துடன் தற்போது பெருமளவான பொதுமக்களால் பாவிக்கப்பட்டுவரும் 40 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரிலும் ஒரு வகையான வாசனை வீசுகின்றது. இது குடிப்பதற்கு தகுதியானதா? என்பதை தெரியாமலேயே பொதுமக்கள் தற்போது இந்த கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரை அருந்தி வருகின்றனர். இத்தகைய வசதிகள் ஒரளவு நகர்புற மக்களிடமே உள்ளது கிராமப்புற ஏழைகள் மிகவும் நீருக்காக கஸ்டப்படுகின்றனர்.
எனவே கிழக்கின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படபோகும் நீர் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொது மக்களுக்கான நீர் வினியோக நடவடிக்கைகளையும் மேட்கொள்வார்களா?
மட்டக்களப்பு விசேட தொடர்பாளர்.
0 comments :
Post a Comment