Thursday, October 22, 2009

இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவைச் சந்தித்தார்.

இந்திய இராணுவத்தின் தேசிய இராணுப் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனர் லெப். ஜெனரல் R.K Karwal இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை சந்தித்தார். இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் தனது துணைவியார் சகிதம் இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவப் பயிற்சி நிலையங்களில் இடம்பெற்றுவரும் பல விசேட நிகழ்வுகளில் பங்கு பற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இராணுவத் தளபதியுடன் பேசிய லெப். ஜெனரல் R.K Karwal இலங்கையில் போர்முடிவந்துள்ள நிலையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்ததாகவும், இருவரும் ஞாபகச் சின்னங்களை பரிமாறிக்கொண்டதாகவும் மேலும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com