ஓய்வூ பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மீண்டும் சேவையில்! கல்வி அமைச்சு நடவடிக்கை
ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களை இன்னும் இரண்டு வாரங்களில் கோர இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இவ்வாறு நியமனம் பெறுகின்றவர்கள் பாடசாலைகளில் உயர் தரத்திற்கான கலை மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்பிப்பதில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. உறுப்பினர் ஆர். பீ. ஏ. ரணவீர பத்திரன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வாய்மூலம் பதில் அளித்தபோதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
பட்டதாரிகள் உருவாகும்வரை, தற்போது ஓய்வு பெற்றுச் சென்றிருக்கும் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment