புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பிரதேசத்தில் முதலாவது அணி மீள் குடியேற்றம்.
புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களுள் மக்களை மீள் குடியமர்த்தும் பணி ஆரம்பித்துள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக இன்று 1000 மக்கள் முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாலிநகர் பிரதேத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வுவனியா செட்டிக்குளம் முகாமில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்களில் ஒருதொகுதியினரே இன்று முல்லைத்தீவு பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் பொருட்டு இன்று துணுக்காய் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விசேட சம்பிரதாயபூர்வ ஆரம்ப நிகழ்வில் பிரதேச சபைத் தலைவர் மற்றும் இரு அமைச்சர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.
இவ்வாறு மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது சொந்த வீடுகளில் குடியமர்த்தப்பட்டனரா அன்றில் அங்கும் முகாம்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்பது இது வரை தெளிவாகவில்லை. இது தொடர்பாக அனர்த்த நிவாரண அமைச்சை தொடர்பு கொண்டபோது பதிலளிக்கவல்ல அதிகாரிகள் எவரையும் அணுகமுடியவில்லை.
0 comments :
Post a Comment