Monday, October 7, 2019

35 பேர் வேட்பு மனுத்தாக்கல். தேர்தல் செலவு 400 கோடியையும் தாண்டுகின்றது.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவதற்கு இன்று காலை 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக 41 பேர் கட்டணம் செலுத்தியிருந்த நிலையிலேயே 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்ததுடன் அவற்றில் இரு வேட்பு மனுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்காக 400 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்த்திருந்தபோதிலும் செலவுகள் 400 கோடியை தாண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இச்செலவு அதிகரிப்பதற்கான பிரதான காரணம் வேட்பாளர் தேர்வுப் பத்திரிகை இலங்கை வரலாற்றிலேயே நீண்டதாக அமைந்துள்ளதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com