Wednesday, October 21, 2009

மேலும் ஒரு தொகுதி மக்கள் மட்டக்களப்பு வருகை

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தொகுதியினர் நேற்று அதிகாலை மட்டக்களப்பு அழைத்துவரப்பட்டனர். 298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் அழைத்து வரப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com