Wednesday, September 30, 2009

பொலிஸாரை தாக்கிய பிரதி அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்.

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ. பீ. எக்கநாயக்கவின் மகனான பிரதேச சபைத் உறுப்பினர் ரசிக்க எக்கநாயக்கவை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுரம் மஜிஸ்திரேட் தர்சிக்கா விமலசிறி உத்தரவிட்டார். ரசிக்க எக்கநாயக்க அனுராதபுரம் பிரதேசத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கி, துப்பாக்கி பிரயோகம் செய்திருந்ததை தொடர்ந்து அவரை கைது செய்து செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுதுத்துமாறு அனுராதபுரம் நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தது.

இன்று காலை ரசிக்க எக்கநாயக்க சட்டத்தரணிகளுடன் மன்றில் ஆஜராகியபோது அவரை விளக்க மறியில் வைக்க மன்று உத்தரவிட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com