Tuesday, September 8, 2009

எஞ்சியுள்ள புலிகளின் நடவடிக்கைகளில் அவதானமாக இருங்கள். பொலிஸ் மா அதிபர்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளபோதும் அவர்களினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் 100 வீதம் முடிவுறவில்லை என பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாண எல்லையில் உள்ள மின்னேரியப் பிரதேசத்தில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை திறந்து வைத்து பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், எஞ்சியுள்ள புலிகளின் இரகசிய செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புலிகள் கிழக்கில் இருவருடங்களுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்டபோதும் அவர்களின் சில செயற்பாடுகள் விசேடமாக இப்பிரசேங்களிலேயே காணப்படுகின்றன. எனவே சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் நிலைநாட்டும் பொலிஸாரின் கடமைகளுக்கு மக்களாகிய உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com