Tuesday, September 8, 2009

ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க பதிலளித்தபோதே இவ்விடயம் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர்களாக எத்தனைபேர் ஜனாதிபதியினால் நியமனம் பெற்றுள்ளனர் என்ற கேள்வி அங்கு எழுப்பப்பட்டபோது, பதிலளிக்கும் பொருட்டு பிரதமர் ஆலோசகர்கள் பட்டியல் ஒன்றை சமர்ப்பித்து பேசினார். குறிப்பிட்ட அந்த பட்டியலில் 38 பேரது பெயர்கள் காணப்பட்டதுடன் அதில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் பெயர் காணப்படவில்லை என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com