Tuesday, September 8, 2009

திரவ வெடிபொருட்களை பயன்படுத்தி விமானங்களை தகர்க்க திட்டம்: 3 பேர் குற்றவாளிகள் என பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு

கடந்த 2006 ஆம் ஆண்டு திரவ வெடிபொருட்களை சிறிய பாட்டில்களில் அடைத்து சென்று, லண்டனில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை நடுவானில் தகர்க்க தற்கொலைப்படை தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்தனர். இது பிரிட்டன் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் லண்டனில் உள்ள எரிவாயு டெர்மினல்கள் மற்றும் மின்சக்தி மையங்களை தகர்க்க திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கில் லண்டன் போலீசார் பல் குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களில் அப்துல்லா அகமது அலி, ஆசாத் சர்வார், தன்வீர் உசேன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இப்ராகிம் சாவந்த், அராபத் வாஹீம் கான், வாஹீம் சமான், டொனால்டு ஸ்டீவர்ட் ஒயிட் ஆகிய நால்வரையும் இந்த வழக்கிலிருந்து கோர்ட் விடுவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com