Tuesday, September 8, 2009

காலியில் ஆயுதம்தாங்கிய ஐ.ம.சு. முன்னணி ஆதரவளர்களிடையே மோதல்.

தென் மாகாணசபையின் காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களான சஜித் வாஸ் குணவர்த்தன மற்றும் நிசாந்த முத்துஹெட்டிகம் ஆகியோரது ஆதரவாளர்களிடையே நேற்று 07 செப்டம்பர் மோதல் வெடித்துள்ளது.

ஆயுதம்தாங்கிய ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட இம்மோதலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் பொருட்டு பிரதேசத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட இரு குழுவினரும் பரஸ்பரம் இருதரப்பு அரசியல் பணிமனைகளையும் தாக்கியழித்துள்ளனர். அத்துடன் இரு குழுவினரும் இலக்கத் தகடுகள் இல்லாத வாகனங்களைப் பயன்படுத்தி கடத்தல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com