Friday, June 19, 2020

உயர்தரப் பரீட்சை நடாத்தப்படும் திகதியில் மீண்டும் குழப்பம்....!

பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டதன் பின்னர் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி பற்றி தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை இன்னும் இரு வாரங்களுக்குப் பிறபோடுமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாணவர்களின் வேண்டுகோள் வருவதற்கு முன்னர் பரீட்சை நடைபெறும் திகதி பற்றி கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்திருந்த்து எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பரீட்சை நடாத்தும் தினம் தொடர்பில் மாணவர்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்குமாறு கல்வியமைச்சின் அதிகாரிகளுக்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com