இலங்கை இராணுவத்தினரை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன்... ! வாய்கூசாமல் சொல்கிறார் கருணா
கருணா அம்மான், ஆனையிறவில் இராணுவ வீரர்களைக் கொன்றமை தொடர்பில் அண்மையில் மேடை போட்டு முழங்கியமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா 7 மணித்தியாலங்கள் கருத்துரைத்துள்ளார். பின்னர் ஊடகங்களிடம், எந்தவொரு நிலையிலும் தான் இலங்கை இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் கிழக்கிற்கான ஆயுதப் பிரிவில் தலைமைத்துவம் வகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இராணுவம் தொடர்பில் வாய்வீச்சில் வீரராக மாறியதால் குற்றப்புலனாய்வு்த் திணைக்களம் அவரை விசாரிப்பதற்காக அழைத்திருந்தது. அங்கு அவர், நான் நடந்ததைத்தான் சொன்னேன். நான் எந்தவொரு தப்பான விடயத்தையும் எந்தவொரு பிழையான விடயத்தையும் சொல்லவில்லை. யாரையும் நோகடிக்கும் வண்ணம் அரசியல் பிரச்சாரம் செய்யவில்லை. ஊடகங்களிலிருந்த வந்த சிறியதொரு செய்தியே இது. இந்நாட்டு மக்கள் மீது நாங்கள் இரக்கமாகத்தான் இருக்கின்றோம். கைகலப்பில்லாத, இனவாதமில்லாத அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் கிழக்கிற்கான ஆயுதப் பிரிவில் தலைமைத்துவம் வகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இராணுவம் தொடர்பில் வாய்வீச்சில் வீரராக மாறியதால் குற்றப்புலனாய்வு்த் திணைக்களம் அவரை விசாரிப்பதற்காக அழைத்திருந்தது. அங்கு அவர், நான் நடந்ததைத்தான் சொன்னேன். நான் எந்தவொரு தப்பான விடயத்தையும் எந்தவொரு பிழையான விடயத்தையும் சொல்லவில்லை. யாரையும் நோகடிக்கும் வண்ணம் அரசியல் பிரச்சாரம் செய்யவில்லை. ஊடகங்களிலிருந்த வந்த சிறியதொரு செய்தியே இது. இந்நாட்டு மக்கள் மீது நாங்கள் இரக்கமாகத்தான் இருக்கின்றோம். கைகலப்பில்லாத, இனவாதமில்லாத அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment