Saturday, June 20, 2020

வரதராசாவுக்கு அரசியல் தஞ்சம் அளித்துள்ளது அமெரிக்கா!

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவாவும் போர்க்குற்றம் புரிந்ததாகக் கூறி, அமெரிக்க அரச திணைக்களத்தில் சத்தியப்பிரமாணம் செய்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியர் துரைராசா வரதராசா என்பவருக்கு அமெரிக்க அரசு அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.

துரைராசா கொழும்பில் இது தொடர்பில் கருத்துரைக்கும்போது, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு இராணுவம் குண்டுவீசியதாக தமக்குக் குறிப்பிடுமாறு கூறியதாக கூறியிருந்தார்.என்றாலும், இராணுவம் மருத்துவமனையைத் தாக்கியதாக ஜெனீவாவில் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியர் துரைராசா வரதராசாவை ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு முன் நிறுத்தியவர் ஷெனல் 4 பணிப்பாளர் கெலம் மெக்ரேசி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com