Friday, June 26, 2020

பொதுத் தேர்தலின் பின்னர் ரணில் பொஐஐமு வுடன் கோக்கவுள்ளார் என்கிறார் டில்வின்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என்று தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

அளுத்கமயில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கப் பிரிவினரும் சஜித் பிரேமதாசவும் பிரிந்து நிற்பதற்கான முக்கிய காரணம் தலைமைத்துவ பிரச்சினையே எனவும், ரணில் விக்கிரமசிங்கவின் காலம் நிறைவடைந்தாலும் கூட, அவர் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு விருப்பமில்லாமல் விடாப்பிடியாக நிற்கின்றார். சஜித் விக்கிரமசிங்கவோ தான் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து விடாப்பிடியாக நிற்கின்றார் எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com