Thursday, May 14, 2020

பொதுத்தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிக்கைக்கு எதிர்ப்பு!

ஜூன் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிக்கையை எதிர்த்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளது என்று நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரிய குறித்த நீதிபதிகள் குழுவின் தலைவராகச் செயற்படவுள்ளார்.

புவனெக அலுவிகார, சிசிர த அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் குறித்த நீதிபதிகள் குழுவில் உறுப்பினர்களாகக் கடமையாற்றவுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றின் விசாரிக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com