Monday, May 11, 2020

கொரோனா முடியும்வரை தேர்தலை பிற்போட முடியாது! ஃபெப்ரல் அமைப்பு

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு கொரோனா வைரஸை முற்றிலுமாக அகற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை முகாமைத்துவப்படுத்தி தேர்தலை நடாத்த முடியும் எனவும் ஃபெப்ரல் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி கூறுகிறார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த, நோயாளி ஒருவர்கூட இல்லாத வரை தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார், அதனால் எந்தவொரு கட்சிக்கும் அநீதி ஏற்படாது என்று மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com