Tuesday, April 7, 2020

மேலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்!

கொரோனா தொற்றாளர்களைக் இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இராசாயன பரிசோதனைகளை மேலும் அதிகரிப்பதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும், அதற்காக தற்போது வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தற்போது உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்ைக 178 ஆக அதிகரித்துள்ளது எனவும், எதிர்வரும் நாட்கள் மிகவும் எச்சரிக்கைக்குரிய நாட்கள் எனவும், அந்நாட்களில் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப சமூக இடைவௌியைப் பேணுவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் ஒருவர் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி எனவும், அவர் பலருடம் தொடர்புடையவர் என்பதனால் அதுதொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், மற்றவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com