Tuesday, March 24, 2020

தனிமைப்படுத்தி அவதானிக்கும் நிலையங்களுக்கு இலவசமாக முட்டை . இன்று முதல் முட்டையொன்றின் விலை 10 ரூபாய்.

தனிமைப்படுத்தி அவதானிக்கும் நிலையங்களில் உணவு தயாரிப்பதற்குத் தேவையானளவு முட்டைகளை வழங்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இணங்கியுள்ளது. பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த சங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கேற்ப இன்று (2020.03.23) முற்பகல் அலரி மாளிகையில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் இராணுவ வழங்கல் பிரிவுக்கு ஐம்பதாயிரம் முட்டைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு முட்டை விலையைக் குறைக்குமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் பிரதம அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளமையினால், மக்களின் நலனுக்காக முட்டை விலையைக் குறைப்பதற்குத் தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

அதற்கேற்ப இன்று முதல் முட்டையொன்றைப் பத்து ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும்.

சதொச கூட்டுறவு போன்ற நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், தற்போது நாடு முழுவதும் 450 லொறிகளில் முட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.

அதிக விலையில் முட்டை விற்பனை செய்யப்படுமாயின் 0372293300 எனும் நுகர்வோர் இலக்கத்திற்கு அறியத்தருமாறும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.




தகவல் - விஜயானந்த ஹேரத்
பிரதம அமைச்சரின் ஊடகச் செயலாளர்
பிரதம அமைச்சரின் ஊடகப் பிரிவு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com